சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற இளைஞனுக்கு மறியல்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை சுமேதங்கரபுர பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற இளைஞனை 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (11) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ஏ.முஹீத் உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அதே இடத்தைச்சேர்ந்த 22வயதுடையவர் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் சென்று சிறுமியை பலாத்காரம் செய்ததாக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -