யாழ் கடை ஒன்றினுள் வர்த்தகர் தற்கொலை - கடன் தொல்லை..?

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் உள்ள பல்பொருள் வாணிப கடை ஒன்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (18) நண்பகல் 2 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சடலம் மீட்கப்பட்டு பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் பிரியந்தன் (வயது-34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கடன் தொல்லை குறித்து சக நண்பர்களுடன் குறித்த வர்த்தகர் உரையாடி வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -