பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் உள்ள பல்பொருள் வாணிப கடை ஒன்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (18) நண்பகல் 2 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சடலம் மீட்கப்பட்டு பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் பிரியந்தன் (வயது-34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கடன் தொல்லை குறித்து சக நண்பர்களுடன் குறித்த வர்த்தகர் உரையாடி வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.