மர்ஹும் முகைதீன் அப்துல் காதரை ஞாபகப்படுத்திய கல்குடா சமூகம்..!

ஓட்டமவடி அஹமட் இர்ஷாட்-
ல்குடா தொகுதி மக்களுக்கு அரசியல் முகவரி கொடுத்தவரும், முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான மர்ஹும் அல்-ஹாஜ் முகைதீன் அப்துல் காதரின் 13வது வருட நினைவாக வாழைச்சேனை வை.அகமட் வித்தியாலையத்தில் கடந்த வாரம் கல்குடா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் லியாப்தீனின் தலைமையில் ஒன்று கூடல் நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் முகைதீன் அப்துர் காதரின் பாசறையில் வளர்க்கப்பட்டு இன்றும் அவருடைய அன்பில் வாழ்ந்து வரும் கல்குடா சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்துபவர்களும், சமூக அக்கறையாளர்களும் கலந்து கொண்டதுடன் சமூக ஆர்வலரும் சரீஃப் அலி ஆசிரியர் ஒன்றியத்தின் இஸ்தாபக தலைவருமான சாட்டோ வை.எல்.மன்சூரும் கலந்து கொண்டு மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் நினைவாகவும் அவர் அரசியல் ரீதியாக கல்குடா சமூகத்திற்காக முன்னெடுத்த மறக்க முடியா விடயங்கள் சம்பந்தமாகவும் உரையாற்றினார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -