ஒரு நாள் கூட சிறையில் இருப்பது தமக்கு எனக்கு பிடிக்கவில்லை - பசில்

ஒரு நாள் கூட சிறையில் இருப்பது தமக்கு எனக்கு பிடிக்கவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கலா வாவியை நிர்மானித்த தாதுசே மன்னரை அவரது மகனான காசியப்ப மன்னன் அழைத்து சொத்துக்கள் எங்கே என கேட்ட போது, கைகளில் நீரை ஏந்தி இதுவே எனது சொத்து எனக் கூறியிருந்தார். என்னிடமும் அவ்வாறு கேட்கின்றார்கள். ஜனாதிபதிக்கும் (மஹிந்த) விரைவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான விடயங்கள் இந்த ராஜபக்சக்களுக்கு புதிய விடயமல்ல. என்னை கைது செய்த போது மஹிந்த ஜனாதிபதி என்னைப் பார்வையிட வந்தார்.

என்ன கஸ்டமா ஒரு மூன்று மாத காலம் உள்ளே இருக்கலாம் தானே எனக் கூறினார். ஆனால் எனக்கோ ஒரு நிமிடம் கூட சிறையில் இருக்க பிடிக்கவில்லை.

எவ்வாறெனினும் ராஜபக்சக்களை அச்சுறுத்தி விட முடியாது. எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகித்தாலும் அதனை முறியடிக்க முடியும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -