ஹம்ஸா கலீல்-
காத்தான்குடி அல்- ஹிறா மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் எம்.ஜீ.எம் ஹக்கீம் தலைமையில் நேற்று சனிக்கிழமை(18) இடம்பெற்றது. பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் மாணவர்களால் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டிருந்த அதேவேளை, அதிதிகளாக காத்தான்குடி மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எஸ் இஸ்ஸதீன், முன்னாள் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம் பரீட், உதவி வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பழைய மாணவர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.