பட்டதாரி மௌலவியா மாணவிகளுக்கான புதிய அனுமதி.!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ட்டக்களப்பு-ஏறாவூர் அல் ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தில் புதிய பட்டதாரி மௌலவியா கற்கை நெறியை மேற்கொள்ளவுள்ள மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மார்ச் 28 செவ்வாய்க்கிழமை அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ மாணவர் அனுமதிக்கான தமது விண்ணப்பங்களை 'அல் ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம் புன்னைக்குடா வீதி, ஏறாவூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நிருவாகம் அறிவித்துள்ளது.

மேற்படி கலாபீடத்தில் பட்டதாரி மௌலவியாக்களாகப் பயில விரும்புவோர் 04.04.2017இல் 18 வயதிற்கு மேற்படாதவராகவும், கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவராகவும், அல்குர்ஆனை சரளமாக ஓதக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. இக்கலாபீடத்தில் பயிலும் மௌலவியா மாணவிகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்புடன் கூடிய தங்குமிட வசதி, ஆங்கிலம் சிங்களம் ஆகிய இரண்டாம் மொழித் தேர்ச்சியும், நூலக வசதியுடன் கற்றலுக்கு உகந்த சூழலும் உள்ளதாக நிருவாகம் தெரிவித்துள்ளது.

மேலதிக விவரங்களுக்கு 0772364241 அல்லது 0777262485 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -