வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுச் சபை கூட்டம்.!

வுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் 2017ம் ஆண்டிற்கான பொதுச் சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்றைய தினம் (18/03/2017) வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலைய மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் ஐ.சுகானி தலைமையில் நடைபெற்றது.

மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகி இளைஞர் கழக உறுதியுரை எடுக்கப்பட்டு, ஆதி இளைஞர்களின் உரை இடம்பெற்றது.
தொடர்ந்து ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நடாத்திய 31வது கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மாவட்டத்தில் வெற்றியீட்டிய இளைஞர் கழகங்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2016ம் ஆண்டு சம்மேளனத்தின் கூட்டறிக்கை, கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சம்மேளனம் கலைக்கப்பட்டு 2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக சுந்தரலிங்கம் காண்டீபன், செயலாளராக பதிவு ரீதியில் சுகானி அவர்களும் பொருளாளராக துவாரகனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவ் பொதுக்கூட்டத்துக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் சுனில் ஜெயமன்னே, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அபேயசிங்க , இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான கேசவன், பசிந்து, பிரதேச இளைஞர் கழக செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் 2017

தலைவர் - காண்டீபன்
செயலாளர் - சுகானி (மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி)
பொருளாளர் - துவாரகன் 
உப தலைவர்கள் - குணவர்மன், பசிந்து 
உப செயலாளர்கள் - சஜீவன், தேசானி 
அமைப்பாளர் - ருவந்திக்க 
உப அமைப்பாளர் - ரசிக்க 
விளையாட்டு - மதுரங்க
கலாசாரம் - நவஜீவன்
முயற்சியாண்மை - யசோதரன்
ஊடகம் - சுவிகரன்
தேசிய சேவை - நிதர்சன்
கல்வி மற்றும் பயிற்சி - சியாத்
நிதி - விக்ரமரத்னே 
சூழல் பாதுகாப்பு - தனுசன்
வெளிநாட்டு தொடர்பு - நிபாத்
கணக்காய்வாளர் - ரெஜினோல்ட்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -