அப்துல்சலாம் யாசீம்-
கையளிக்கப்பட்டு. கடத்தப்பட்டு. காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளைத்தேடி அலையும் குடும்ப சங்கத்தினர் இன்று (19) மாலை 4-45 மணியளவில் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனின் வீட்டின் பிரதான நுழைவாயலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 15 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை இதுவரைக்கும் எதுவித முடிவுகளும் கிடைக்காத பட்ஷத்தில் தங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரியே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.