சம்மாந்துறை வீடொன்றிலிருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது..!

யு.எல்.எம்.றியாஸ்-
ம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்படட சம்மாந்துறை வங்களாவடி பிரதேசத்தில் வீடொன்றில் விற்பனைக்காக தயார்படுத்தப்படட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளகஞ்சாவினை சம்மாந்துறை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சுமார் 24 கிலோ கிராம் கேரளகஞ்சா கைப்பற்றப்பட்டது. . சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தேஜா பெரேராவின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய துர் நடத்தை தவிர்ப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பி.ஜி. ஜெயலதன தலைமையிலான பொலிஸ் குழுவினரே இதனை கைப்பற்றியுள்ளனர். 

சுமார் 48 இலட்ச்சம் பெறுமதியான இக்கஞ்சாவினை வைத்திருந்த வீட்டின் உரிமையாலாளரையும் மற்றுமொருவரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்படட இருவரும் இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட்னர். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -