பிரபல மலையக எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்த வினோதரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் மலையக மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் தலைமை உரை ஆற்றினார்.
மேலும் நூலாய்வினை பத்தனை கல்வியற்கல்லூரியின் உபபீடாதிபதி வ.செல்வராஜ் மேற்கொண்டார். வாழ்த்துரையை இலக்கிய ஆய்வாளர் கல்வி வெளியீட்டு தினைக்கலத்தின் பிரதி ஆணையாளரென பண்முகம் கொண்ட லெனின் மதிவானம் மேற்கொண்டார். தொடந்து கருத்துரையை சிறுகதை ஆசிரியர் சிவனு மனோஹரன் மற்றும் மலையக பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் மேற்கொண்டார்.
ஏற்புரையை நூல் ஆசிரியர் வினோதரன் மேற்கொள்ள நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.