

காரைதீவு வி.ரி.சகாதேவராஜா-
நாம் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்களல்ல. கல்முனை தமிழ்ப்பிரதேச செலயக தரமுயர்த்தலுக்கும் எதிரானவர்கள் அல்ல எனினும் கரையோர மாவட்டம் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு தொடர்பில் நிபந்தனையுடன் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக சம்பந்தன் ஜயாவோடு பேசிவருகின்றோம்.அதற்கான நியாயமான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கைஉள்ளது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகரஅபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரவூப்ஹக்கீமிற்கும் கல்முனை தமிழ் சிவில் சமுகப்பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் பதிலளித்தனர்.
கல்முனை தமிழப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கும் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் தடையாக இருப்பதாக அறிகின்றோம்.இந்நிலையில் எவ்வாறு தமிழ்-முஸ்லிம் உற்றுமை பற்றிப்பேசுவது என தமிழ்த்தரப்பினர் கேள்வியெழுப்பியபோதே அவர்கள் மேற்கண்டவாறு பதிலளித்தனர்.
நேற்று சனிக்கிழமை மாலை 4மணியளவில் கல்முனை எஸ்.எல்.ஆர்.விடுதியில் இந்த முக்கியசந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் அமைச்சருடன் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கிழக்குமாகாணமுதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான ஆரிப்சம்சுதீன் சிப்லி மற்றும் வரவழைக்கப்பட்ட கல்முனை மாநகர ஆணையாளர் லியாக்கத்தலி ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
தமிழ்ப்பிரதிநிதிகள் மாகரசபை முன்னாள் எதிர்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் உறுப்பினர் அ.விஜயரெத்தினம் சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தலைமையிலான பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கல்முனை மாநகரசபை தமிழ்ப்பிரதேசங்களைப்புறக்கணிக்கும் விடயம் கல்முனை தமிழ் பிரதேசசெயலக தரமுயர்த்தல் கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் பகிரங்கமாக மனந்திறந்து கலந்துரையாடப்பட்டு சிலபல பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.
கல்முனை மாகரசபை கல்முனை தமிழ்மக்களைப்புறக்கணிப்பது தொடர்பில் பிரதிநதி கு.ஏகாம்பரம் விலாவாரியாக முதலில் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையில் தமிழ்மக்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாள ஒரு மாதத்திற்கு இருதடவைகள் சந்திப்பொன்றை நடாத்துவது.அதில் தமிழர்பிரதிநிதிகள் நால்வரோடு மாநகர ஆணையாளர் பொறியியலாளர் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசிதீர்க்கலாம் என்று பிரதியமைச்சர் ஹரீஸ் சொன்ன ஆலோசனையை அமைச்சர் ஹக்கீம் அங்கீகரித்ததோடு இரு தரப்பினரும் இணக்கம் கண்டனர்.
இக் கலந்துரையாடலின் போது கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் காரணமாக இருப்பதும் கல்முனை தமிழ் பிரதேசங்கள் கல்முனை மாநகர சபையால் புறக்கணிக்கபடுவதும் கல்முனையில் உள்ள வீதிகள் சில திட்டமிட்டு பெயர்மாற்றம் செய்யப்படுவது மற்றும் கல்முனை நகர அபிவிருத்தித்திட்டத்தில் கல்முனை பிரதேச தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அதிகளவான பாதிப்புகள் குறித்தும் தமிழ் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டன .
கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த;தல் தொடர்பாக கல்முனை தமிழ்ப்பிரதிநதிகளான கிருபைராஜா நிதான்சன் ஆகியோர் இவ்வாறு கேள்விதொடுத்தனர்.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயம் கடந்த 35வருடகாலமாக முஸ்லிம் தலைமைகளால் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிக்கப்பட்டுவருவதாக தமிழ்மக்கள் நம்புகின்றார்கள்.இந்தநிலையில் கல்முனையில் எவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் இதயசுத்தியுடன் ஒற்றுமையாக வாழலாம்? ஆளை ஆள் ஆக்கிரமித்து ஒற்றுமையை ஏற்படுத்தலாமா?
தமிழ்ப்பிரதிநிதி சந்திரசேகரம் ராஜன் மற்றும் முன்னாள் மாகரசபைஉறுப்பினர் அ.விஜயரெத்தினம் உரத்தகுரலில் உங்களுக்கு கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு விருப்பமில்லையா? அதனை முதலில் கூறுங்கள் என்றனர்.
பதிலளித்த பிரதியமைச்சர் ஹரீஸ்;
எதையும் நாம் மனந்திறந்து பேசவேண்டும். கல்முனையிலுள்ள இரு பிரதேசசெயலகங்களையும் ஒன்றாக இணைத்து இருஇனங்களையும் மோதவிடவேண்டுமென்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கல்முனைபிரதேசசெயலகத்திற்கு சிங்கள பிரதேசசெயலாளரை நியமித்தார்.
அதிஸ்டவசமாக மஹிந்த தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக அது நிறைவேறவில்லை. கல்முனை தமிழ்;ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு நாம் எதிர்ப்பல்ல. ஆனால் அந்தப்பிரச்சினைபோன்றே அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் சமுகத்திற்கும் ஒரு பிரச்சினை உள்ளது.
அதாவது தமிழ்மொழி வாரியான கரையோரமாவட்டம் உருவாக்குவதுதென்பது நீண்டகால கனவாகும்.
இது தமிழ்பேசுகின்ற இருசமுகங்களுக்கும் பொதுவானதொரு மாவட்டக்கோரிக்கை.இருசாராரும் நன்மைபெறலாம்.
எனவே இந்த மொழிவாரியான கரையோர மாவட்டத்திற்கு உடன்பாடு காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தல் என்பது ஒரு பிரச்சனையேயல்ல.அதற்கு நாம் எதிர்ப்புமல்ல. எமது சிவில் சமுகப்பிரச்சனைகளையும் நாம் பார்;க்கவேண்டும். இதுதான் யதார்த்தம். என்றார்.
பிரதிநிதி நிதாஞ்சன்கூறுகையில்:
கல்முனை பழைய பஸ்தரிப்புநிலையத்தில் தனியார்வங்கிக்கு இடம்வழங்கப்பட்டுள்ளது. அதனால் நகரில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்திற்கு செல்வதானால் தனியார் பஸ் குறுக்கறுக்கும். மற்றது கல்முனையில் தமிழ் ஆட்டோக்கள் ஓடமுடியாது என்றவகையில் முன்னாள் மேயர் நிசாம்காரியப்பர் காலை மேசைக்குமேல்போட்டுக்கொண்டு அலட்சியமாகச் சொன்னார்.
கலமுனைசந்தாங்கேணி மைதானம் ஒருபொது மைதானம் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அதனை ஒரு கழகம் மட்டும் பயன்படுத்திவருவது யாருக்கும் தெரியாது. கல்முனை மாநகரில் பல்ப் போடவேண்டியது மாகரசபையின் கடமை.என்றார்.
பிரதிநிதி நிதாஞ்சன் சந்திரசேகரம் ராஜன் மற்றுமொரு பிரச்சினையை முன்வைத்தனர்.
உத்தேச கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டம் கல்முனைவாழ் தமிழ்மக்களின் காணிகளை சுவீகரித்து முஸ்லிம்களை குடியேற்றவிருப்பதாகவும் எதிர்காலத்தில் இப்பிரதேசம் தாழ்ந்துபோகும் ஆபத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
ஒரு மணிநேரம் தமிழ்ப்பிரதிநிதிகள் பேசியவற்றை அவதானித்து அமைதியாகவிருந்த அமைச்சர் ஹக்கீம் முதல் தடவையாக வாய்திறந்தார்.
அவர்கூறுகையில்:
எதனையும் பேசித்தீர்க்கமுடியும். உங்கள் மாகரசபை பிரச்சினைகளை அதற்கான உயரதிகாரம் படைத்த கிழக்குமாகாணமுதலமைச்சர் ஆணையாளருடாகக் கையாள்வார் அது பிரச்சினையல்ல. சவக்காலைக்கு காவலாளி போடுவது வீதி திருத்துவது வடிகான் அமைப்பது பல்ப் போடுவது இதெல்லாம் அவர்பார்த்துக்கொள்வார்.
பாரிய அபிவிருத்திப்பணிகள் இருந்தால் என்னிடம் மதிப்பீட்டோடு தாருங்கள் .நாமும் உச்சளவு உதவலாம்.
புதிய நகர அபிவிருத்தித்திட்டம் பலாத்காரமாகவோ ஒருதலைப்பட்சமாகவோ நடைமுறைப்படுத்தப்படமாட்டாது. அத்கு நான் உத்தரவாதம்.
பொதுத்தேவைகளுக்கா காணிகள் சுவீகரிக்கப்படுமேயன்றி முஸ்லிம் மக்களை ஒருபோதும் தமிழர்காணிகளில் குடியேற்ற அனுமதிக்கமாட்டோம்.
திட்டத்திற்கா மாஸ்ரர் பிளான் வந்ததும் அனைவருக்கும் காட்டியே அதனை முன்னெடுப்போம். எங்காவது எதற்காவது எதிர்ப்பு இருந்தால் அந்த விடயத்தைச் செய்யமாட்டோம்.
கல்முனைதமிழ்மக்களின் இனனப்பரம்பலைப்பாதிக்காதவகையில்தான் புதிய நகரஅபிவிருத்தித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.அதற்கான உபாயங்கள் பின்பற்றப்படும். அச்சப்படத்தேவையில்லை. என்றார்.
பிரதிநிதி லிங்கேஸ்வரன் கூறுகையில்:
கிழக்குமாகாணத்தில் வேலைவாய்ப்பில் தமிழ்மக்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.விகிதாசாரம் பேணப்படவேண்டும். தேசியநீர்வழங்கல் வடிகாமைப்புச்சபையில் முஸ்லிம்களை மாத்திரம் நியமிக்கின்றீர்கள்.இது பற்றி சம்பச்தர்ஜயாவிடம் சொன்னால் நீங்கள் ஒற்றுமையைக்குழப்பவேண்டாம் என்கிறார். நாம் யாரிடம் செல்வது?
பிரதிநிதி ஆ.வினாயகம்பிள்ளை பேசுகையில் கல்முனையில் தமிழ்முஸ்லிம் மக்களிடையேயான பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவுள்ளது.வெறுமனே ஒற்றுமைபற்றிப்பேசிப்பயனில்லை. முஸ்லிம் தரப்பு ஒன்றைக்கொண்டுவந்தால் தமிழ்மக்கள் அதனைபிழையாகவிளங்குகின்றனர்.அதற்கு நியாயமான காரணங்களுண்டு.
இனிமேலாவது இதனை விடுங்கள்.மக்களது உறவுகள் காப்பாற்றப்டவேண்டும். அடுத்த சந்ததிக்கு இப்பிரச்சனைகளை விட்டுவிட்டுப்போகக்கூடாது. எந்தப்பிரச்சiனாயலம் தீர்க்கப்படவேண்டும் என்றார்.
சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன் கூறுகையில்
பிரதிநிதி அ.விஜயரெத்தினம் மேலும்கூறுகையில்:
தொகுதிரீதியலான தேர்தல் முறைமை வந்தால் கல்முனைக்கு அதாவது எமக்கு எம.;பி.கிடையாது.எனவே இணைந்துதான் செயலாற்றவேண்டும்.
நாம் சாய்ந்தமருது பிரதேசபை தனியாகப்பிரித்துக்கொடுப்பதற்கு தடையில்லை. எனின் ஏன் இன்னும் எமது தமிழ்பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த நீங்கள் தடையாயிருக்கிறீர்கள்?
குறுக்கிட்ட பிரதியமைச்சர் ஹரீஸ்,
நாம் தடையாகவிருக்கவில்லை.உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எமது மொழிவாரியான கரையோரமாவட்டக்கோரிக்கையை முற்றாக எதிர்க்கின்றார். இந்நிலையில் எமது சமுகப்பிரச்சினையையும் நாம் இலாவகமாகக்கையாளவேண்டும்தானே.பொத்துவில் தொடக்கம் கல்முனை வரை தமிழ்முஸ்லிம் மக்கள் ஒன்றாகஇருக்கின்றனர். எமது 7ஆயிரம் ஏக்கர் வயற்காணிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்கவேண்டும். தேசிய ரீதியில் முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் பேச்சுவார்தையிலீடுபட்டுவருகின்றன.
நாம் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்களல்ல. கல்முனை தமிழ்ப்பிரதேச செலயக தரமுயர்த்தலுக்கும் எதிரானவர்கள் அல்ல எனினும் கரையோர மாவட்டம் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு தொடர்பில் நிபந்தனையுடன் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக சம்பந்தன் ஜயாவோடு பேசிவருகின்றோம்.அதற்கான நியாயமான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கைஉள்ளது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகரஅபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரவூப்ஹக்கீமிற்கும் கல்முனை தமிழ் சிவில் சமுகப்பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் பதிலளித்தனர்.
கல்முனை தமிழப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கும் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் தடையாக இருப்பதாக அறிகின்றோம்.இந்நிலையில் எவ்வாறு தமிழ்-முஸ்லிம் உற்றுமை பற்றிப்பேசுவது என தமிழ்த்தரப்பினர் கேள்வியெழுப்பியபோதே அவர்கள் மேற்கண்டவாறு பதிலளித்தனர்.
நேற்று சனிக்கிழமை மாலை 4மணியளவில் கல்முனை எஸ்.எல்.ஆர்.விடுதியில் இந்த முக்கியசந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் அமைச்சருடன் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கிழக்குமாகாணமுதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான ஆரிப்சம்சுதீன் சிப்லி மற்றும் வரவழைக்கப்பட்ட கல்முனை மாநகர ஆணையாளர் லியாக்கத்தலி ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
தமிழ்ப்பிரதிநிதிகள் மாகரசபை முன்னாள் எதிர்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் உறுப்பினர் அ.விஜயரெத்தினம் சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தலைமையிலான பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கல்முனை மாநகரசபை தமிழ்ப்பிரதேசங்களைப்புறக்கணிக்கும் விடயம் கல்முனை தமிழ் பிரதேசசெயலக தரமுயர்த்தல் கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் பகிரங்கமாக மனந்திறந்து கலந்துரையாடப்பட்டு சிலபல பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.
கல்முனை மாகரசபை கல்முனை தமிழ்மக்களைப்புறக்கணிப்பது தொடர்பில் பிரதிநதி கு.ஏகாம்பரம் விலாவாரியாக முதலில் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையில் தமிழ்மக்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாள ஒரு மாதத்திற்கு இருதடவைகள் சந்திப்பொன்றை நடாத்துவது.அதில் தமிழர்பிரதிநிதிகள் நால்வரோடு மாநகர ஆணையாளர் பொறியியலாளர் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசிதீர்க்கலாம் என்று பிரதியமைச்சர் ஹரீஸ் சொன்ன ஆலோசனையை அமைச்சர் ஹக்கீம் அங்கீகரித்ததோடு இரு தரப்பினரும் இணக்கம் கண்டனர்.
இக் கலந்துரையாடலின் போது கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் காரணமாக இருப்பதும் கல்முனை தமிழ் பிரதேசங்கள் கல்முனை மாநகர சபையால் புறக்கணிக்கபடுவதும் கல்முனையில் உள்ள வீதிகள் சில திட்டமிட்டு பெயர்மாற்றம் செய்யப்படுவது மற்றும் கல்முனை நகர அபிவிருத்தித்திட்டத்தில் கல்முனை பிரதேச தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அதிகளவான பாதிப்புகள் குறித்தும் தமிழ் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டன .
கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த;தல் தொடர்பாக கல்முனை தமிழ்ப்பிரதிநதிகளான கிருபைராஜா நிதான்சன் ஆகியோர் இவ்வாறு கேள்விதொடுத்தனர்.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயம் கடந்த 35வருடகாலமாக முஸ்லிம் தலைமைகளால் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிக்கப்பட்டுவருவதாக தமிழ்மக்கள் நம்புகின்றார்கள்.இந்தநிலையில் கல்முனையில் எவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் இதயசுத்தியுடன் ஒற்றுமையாக வாழலாம்? ஆளை ஆள் ஆக்கிரமித்து ஒற்றுமையை ஏற்படுத்தலாமா?
தமிழ்ப்பிரதிநிதி சந்திரசேகரம் ராஜன் மற்றும் முன்னாள் மாகரசபைஉறுப்பினர் அ.விஜயரெத்தினம் உரத்தகுரலில் உங்களுக்கு கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு விருப்பமில்லையா? அதனை முதலில் கூறுங்கள் என்றனர்.
பதிலளித்த பிரதியமைச்சர் ஹரீஸ்;
எதையும் நாம் மனந்திறந்து பேசவேண்டும். கல்முனையிலுள்ள இரு பிரதேசசெயலகங்களையும் ஒன்றாக இணைத்து இருஇனங்களையும் மோதவிடவேண்டுமென்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கல்முனைபிரதேசசெயலகத்திற்கு சிங்கள பிரதேசசெயலாளரை நியமித்தார்.
அதிஸ்டவசமாக மஹிந்த தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக அது நிறைவேறவில்லை. கல்முனை தமிழ்;ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு நாம் எதிர்ப்பல்ல. ஆனால் அந்தப்பிரச்சினைபோன்றே அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் சமுகத்திற்கும் ஒரு பிரச்சினை உள்ளது.
அதாவது தமிழ்மொழி வாரியான கரையோரமாவட்டம் உருவாக்குவதுதென்பது நீண்டகால கனவாகும்.
இது தமிழ்பேசுகின்ற இருசமுகங்களுக்கும் பொதுவானதொரு மாவட்டக்கோரிக்கை.இருசாராரும் நன்மைபெறலாம்.
எனவே இந்த மொழிவாரியான கரையோர மாவட்டத்திற்கு உடன்பாடு காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தல் என்பது ஒரு பிரச்சனையேயல்ல.அதற்கு நாம் எதிர்ப்புமல்ல. எமது சிவில் சமுகப்பிரச்சனைகளையும் நாம் பார்;க்கவேண்டும். இதுதான் யதார்த்தம். என்றார்.
பிரதிநிதி நிதாஞ்சன்கூறுகையில்:
கல்முனை பழைய பஸ்தரிப்புநிலையத்தில் தனியார்வங்கிக்கு இடம்வழங்கப்பட்டுள்ளது. அதனால் நகரில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்திற்கு செல்வதானால் தனியார் பஸ் குறுக்கறுக்கும். மற்றது கல்முனையில் தமிழ் ஆட்டோக்கள் ஓடமுடியாது என்றவகையில் முன்னாள் மேயர் நிசாம்காரியப்பர் காலை மேசைக்குமேல்போட்டுக்கொண்டு அலட்சியமாகச் சொன்னார்.
கலமுனைசந்தாங்கேணி மைதானம் ஒருபொது மைதானம் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அதனை ஒரு கழகம் மட்டும் பயன்படுத்திவருவது யாருக்கும் தெரியாது. கல்முனை மாநகரில் பல்ப் போடவேண்டியது மாகரசபையின் கடமை.என்றார்.
பிரதிநிதி நிதாஞ்சன் சந்திரசேகரம் ராஜன் மற்றுமொரு பிரச்சினையை முன்வைத்தனர்.
உத்தேச கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டம் கல்முனைவாழ் தமிழ்மக்களின் காணிகளை சுவீகரித்து முஸ்லிம்களை குடியேற்றவிருப்பதாகவும் எதிர்காலத்தில் இப்பிரதேசம் தாழ்ந்துபோகும் ஆபத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
ஒரு மணிநேரம் தமிழ்ப்பிரதிநிதிகள் பேசியவற்றை அவதானித்து அமைதியாகவிருந்த அமைச்சர் ஹக்கீம் முதல் தடவையாக வாய்திறந்தார்.
அவர்கூறுகையில்:
எதனையும் பேசித்தீர்க்கமுடியும். உங்கள் மாகரசபை பிரச்சினைகளை அதற்கான உயரதிகாரம் படைத்த கிழக்குமாகாணமுதலமைச்சர் ஆணையாளருடாகக் கையாள்வார் அது பிரச்சினையல்ல. சவக்காலைக்கு காவலாளி போடுவது வீதி திருத்துவது வடிகான் அமைப்பது பல்ப் போடுவது இதெல்லாம் அவர்பார்த்துக்கொள்வார்.
பாரிய அபிவிருத்திப்பணிகள் இருந்தால் என்னிடம் மதிப்பீட்டோடு தாருங்கள் .நாமும் உச்சளவு உதவலாம்.
புதிய நகர அபிவிருத்தித்திட்டம் பலாத்காரமாகவோ ஒருதலைப்பட்சமாகவோ நடைமுறைப்படுத்தப்படமாட்டாது. அத்கு நான் உத்தரவாதம்.
பொதுத்தேவைகளுக்கா காணிகள் சுவீகரிக்கப்படுமேயன்றி முஸ்லிம் மக்களை ஒருபோதும் தமிழர்காணிகளில் குடியேற்ற அனுமதிக்கமாட்டோம்.
திட்டத்திற்கா மாஸ்ரர் பிளான் வந்ததும் அனைவருக்கும் காட்டியே அதனை முன்னெடுப்போம். எங்காவது எதற்காவது எதிர்ப்பு இருந்தால் அந்த விடயத்தைச் செய்யமாட்டோம்.
கல்முனைதமிழ்மக்களின் இனனப்பரம்பலைப்பாதிக்காதவகையில்தான் புதிய நகரஅபிவிருத்தித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.அதற்கான உபாயங்கள் பின்பற்றப்படும். அச்சப்படத்தேவையில்லை. என்றார்.
பிரதிநிதி லிங்கேஸ்வரன் கூறுகையில்:
கிழக்குமாகாணத்தில் வேலைவாய்ப்பில் தமிழ்மக்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.விகிதாசாரம் பேணப்படவேண்டும். தேசியநீர்வழங்கல் வடிகாமைப்புச்சபையில் முஸ்லிம்களை மாத்திரம் நியமிக்கின்றீர்கள்.இது பற்றி சம்பச்தர்ஜயாவிடம் சொன்னால் நீங்கள் ஒற்றுமையைக்குழப்பவேண்டாம் என்கிறார். நாம் யாரிடம் செல்வது?
பிரதிநிதி ஆ.வினாயகம்பிள்ளை பேசுகையில் கல்முனையில் தமிழ்முஸ்லிம் மக்களிடையேயான பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவுள்ளது.வெறுமனே ஒற்றுமைபற்றிப்பேசிப்பயனில்லை. முஸ்லிம் தரப்பு ஒன்றைக்கொண்டுவந்தால் தமிழ்மக்கள் அதனைபிழையாகவிளங்குகின்றனர்.அதற்கு நியாயமான காரணங்களுண்டு.
இனிமேலாவது இதனை விடுங்கள்.மக்களது உறவுகள் காப்பாற்றப்டவேண்டும். அடுத்த சந்ததிக்கு இப்பிரச்சனைகளை விட்டுவிட்டுப்போகக்கூடாது. எந்தப்பிரச்சiனாயலம் தீர்க்கப்படவேண்டும் என்றார்.
சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன் கூறுகையில்
கல்முனை புதியநகரஅபிவிருத்தித்திட்டம் ஒரு சமாதான நகரமாக மாறும் யாரும் சந்தேகம்கொள்ளத்ததேவையில்லை என்றார்.
பிரதிநிதி அ.விஜயரெத்தினம் மேலும்கூறுகையில்:
தொகுதிரீதியலான தேர்தல் முறைமை வந்தால் கல்முனைக்கு அதாவது எமக்கு எம.;பி.கிடையாது.எனவே இணைந்துதான் செயலாற்றவேண்டும்.
நாம் சாய்ந்தமருது பிரதேசபை தனியாகப்பிரித்துக்கொடுப்பதற்கு தடையில்லை. எனின் ஏன் இன்னும் எமது தமிழ்பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த நீங்கள் தடையாயிருக்கிறீர்கள்?
குறுக்கிட்ட பிரதியமைச்சர் ஹரீஸ்,
நாம் தடையாகவிருக்கவில்லை.உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எமது மொழிவாரியான கரையோரமாவட்டக்கோரிக்கையை முற்றாக எதிர்க்கின்றார். இந்நிலையில் எமது சமுகப்பிரச்சினையையும் நாம் இலாவகமாகக்கையாளவேண்டும்தானே.பொத்துவில் தொடக்கம் கல்முனை வரை தமிழ்முஸ்லிம் மக்கள் ஒன்றாகஇருக்கின்றனர். எமது 7ஆயிரம் ஏக்கர் வயற்காணிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்கவேண்டும். தேசிய ரீதியில் முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் பேச்சுவார்தையிலீடுபட்டுவருகின்றன.
அது தொடரும் . நம்பிக்கையுடனிருப்போம்.நல்லதுநடக்கும் என்றார்.
இறதியாக பிரதிநிதி சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:
சம்பந்தன் ஜயா திருமலையில் எங்களுடன் பேசும்போது அம்பாறையில் முஸ்லிம்களை தலைமையாகக்கொண்ட நிருவாக அலகு அதற்கு இரண்டாவது தலைமையாக தமிழரும் இருப்பார்.அதுபோல மட்டக்களப்பில் முதல்தலைமையாக தமிழரும் இரண்டாவதாக முஸ்லிமும் இருப்பர் என்று சொல்லியுள்ளார். என்றார்.
உடனே அமைச்சர் தரப்பினர் இவ்வாறு பதிலளித்தனர்.
அப்படியென்றால் பிரச்சினையையே இல்லை. சகலதும் நன்றாக நடக்கும்.தமிழ்ப்பிரதேசசெலயகமும் தரமுயரும் . சந்தோசமாக கலைவோம் என்றுகூறி கூட்டம் முடிந்தது.
இறதியாக பிரதிநிதி சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:
சம்பந்தன் ஜயா திருமலையில் எங்களுடன் பேசும்போது அம்பாறையில் முஸ்லிம்களை தலைமையாகக்கொண்ட நிருவாக அலகு அதற்கு இரண்டாவது தலைமையாக தமிழரும் இருப்பார்.அதுபோல மட்டக்களப்பில் முதல்தலைமையாக தமிழரும் இரண்டாவதாக முஸ்லிமும் இருப்பர் என்று சொல்லியுள்ளார். என்றார்.
உடனே அமைச்சர் தரப்பினர் இவ்வாறு பதிலளித்தனர்.
அப்படியென்றால் பிரச்சினையையே இல்லை. சகலதும் நன்றாக நடக்கும்.தமிழ்ப்பிரதேசசெலயகமும் தரமுயரும் . சந்தோசமாக கலைவோம் என்றுகூறி கூட்டம் முடிந்தது.