கிண்ணியா பொலிஸாரால் சட்டவிரோத 05 கோடா சாராய பரல்கள் கைப்பற்றல்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவு உப்பாறு காட்டுப்பகுதியில் இன்று (12) சட்டவிரோத மதுபான 05 பரல்களுடன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் ஐந்து பரல்களும் சுமார் 845 லீற்றர் இடை கொண்ட கோடாவாக உள்ளதாகவும் சாராயம் காய்க்கும் தயார் நிலையில் இது காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனை கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் புரோஜன் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவின் தேடுதல் முயற்சியில் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் . இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கிண்ணியா பொலிஸார் தேடி வருவதாகவும் மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -