”கல்வியமைச்சரின் உத்தரவு இல்லாமல் இந்த 10விடயங்களையும் செய்ய முடியாது” அதிரடி உத்தரவு

ரச தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல், இடமாற்றம் செய்தல் உட்பட குறித்த பாடசாலையுடன் தொடர்புடைய 10 நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சர் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிவித்தல், அமைச்சின் கீழ் உள்ள சகல மேலதிகச் செயலாளர்களுக்கும், திணைக்களங்களுக்கும், நிறுவன பிரதானிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன், ஊடகங்களுக்கு அறிவித்தல்களை விடுத்தல், சுற்றுநிருபங்களை வெளியிடுதல், பாடசாலை கட்டிடங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி உபகரணங்களை வழங்குதல் என்பவற்றுக்கும் கல்வி அமைச்சரின் நேரடி அனுமதி பெறப்படுதல் வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப பீடம் அமைத்தல், அதனுடன் தொடர்பான நடவடிக்கைகள், கல்வியுடன் தொடர்புடைய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுதல் போன்றவற்றுக்கும் கல்வி அமைச்சரின் அனுமதி அவசியமாகும்.

அமைச்சின் கொள்கைகளுக்கு மாற்றமாக செயற்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவல்கள் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -