புத்ததாண்டை முன்னிட்டு 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு..!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பத்து அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கடந்த காலத்தை விடவும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்து காணப்படுகின்றதானது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சி பொறுப்பினை கையளிக்கும் போது அரிசி கிலோ ஒன்றின் விலை 110 ரூபாயாக காணப்பட்ட நிலையில் தற்போது 75 ரூபாயாகவும் பருப்பு கிலோவொன்றின் விலை 230 தொடக்கம் 240 ரூபாய் வரையிலும் காணப்பட்டது. எனினும் தற்போது 157 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 

பால்மா பக்கற்றொன்றின் விலை கடந்த காலத்தில் 425 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 210 ரூபாய் முதல் 270 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. பெற்றோல் டிசல் லீற்றறொன்றின் விலையும் கடந்த காலத்தில் அதிகரித்தே கானப்பட்டது.

அத்துடன் சமையல் எரிவாயு வொன்றின் விலை 2635 ரூபாயாக கடந்த ஆட்சிக்காலத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1350 ரூபாவாகவும் மண்ணெண்ணை லீற்றரொன்றின் விலை கடந்த காலத்தில் 80 ரூபாயாக கானப்பட்ட நிலையில் தற்போது 45 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 

இவ்வாறு கடந்த ஆட்சிக்காலத்தை விடவும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போது குறைவாகவே விற்பணை செய்யப்படுகின்றது. இந்நிலையிலேயே விலைகள் அதிகரித்து காணப்படுவதாக அரசாங்கத்தின் மீது வீண்புரளிகளை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர். 

தற்போது விற்பணை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை காட்டிலும் மேலும் விலை குறைப்பு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் உட்பட ஆளும் கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் சகலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைவாக தொடர்ந்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் குறைப்பு செய்வதற்கும் எதிர்ப்பார்த்துள்ளோம்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கோரிக்கைகளுக்கமைவாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று (நேற்று) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை சதோச நிறுவனங்களில் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -