தடை செய்யப்பட்ட இடத்தில் மீன்பிடித்த 10 கிண்ணியா மீணவர்கள் கைது..!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலையில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிக்க தடைசெய்யப்பட்ட பிரதேசமான நோர்வே தீவுக்கருகில் இன்று மாலை 3.00 மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கிண்ணியா பிரதேச மீனவர்கள் 10 பேரை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்கள் பயன்படுத்திய சுருக்கு வலையையும் ஒரு படகையும் மேலும் அவர்கள் பிடித்த 300 கிலோவுக்கு அதிகமான மீன்களையும் திருகோணமலை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் மாலை 5.00 மணியளவில் கடற்படையினர் ஒப்படைத்தனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -