இலண்டனில் அமிலம் விசிறப்பட்டுத் தாக்குதல் - 12 பேர் காயம் : 600 பேர் வெளியேற்றம்!

எஸ். ஹமீத்-

கிழக்கு இலண்டனிலுள்ள ஒரு களியாட்ட விடுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் சக்தி வாய்ந்த அமிலம் விசிறப்பட்டதினால் சுமார் 12 பேர்வரை படுகாயங்களுக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

கிழக்கு இலண்டனிலுள்ள டால்ஸ்டான் என்னும் பகுதியிலிருக்கும் மங்கில் இரவு விடுதியில் (Mangle nightclub in Dalston, East London) இரு குழுக்களுக்கிடையே சர்ச்சை மூண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒரு குழுவினரால் மற்றைய குழுவினர் மீது தகரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காரமான அமிலத் திரவம் (HIGHLY CONCENTRATED ACID) விசிறியடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 12 பேர் வரை கடுமையான எரிகாயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

சம்பவத்தையடுத்து அப்பகுதியிலிருந்து 600 பேர் வரையானோர் தங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். காற்றில் அமிலம் கலந்து பிரச்சனைகளை ஏற்படுத்தலாமென்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் குறிப்பிட்ட பகுதி தற்போது போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது.

இலண்டன் போலீசார் இதுபற்றித் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -