முல்லைத்தீவு மக்களின் காணிப்பிரச்சினை - 12வது நாளாக தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு முறிப்பு கொத்தியாகும்பம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் 12வது நாளாக தொடர்கின்றது. அமைச்சர் றிஷாட் பதியுதீன், பா.உ Dr சிவமோகன், தேசிய ஐக்கிய முண்ணனி தலைவர் அசாத் சாலி மற்றும், சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம் சஹீட், மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

தந்தை றஹீம் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அதிகாரிகளாலும்,ஒரு சில அரசியல்வாதிகளாலும் இழைக்கப்பட்ட அநீதிகளை விபரித்தார். பல முறை காணி கச்சேரிகள் வைக்கப்பட்டும் இற்றைவரை அவர்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லையென போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதன் பின் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் அந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, அமைச்சர் றிஷாட் தீர்வுக்கான வழிமுறைகளை ஆராய்ந்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -