குப்பைக்கு ஏன் தீர்வொன்று இல்லை - யாப்பா கேள்வி

மீதொடமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த போதிலும், அதற்கு முறையான தீர்வொன்று பெறப்படாதுள்ளமை ஏன் என்று தெரியாதுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரமான முறையில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்றை அமைப்பது இதற்கான தீர்வாகும் என்றும், கொரிய நாட்டின் உதவியுடன் தொம்பே பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு இடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் நாடு பூராகவும் இது போன்ற 05 குப்பை கொட்டும் இடங்களை அமைப்பதற்கு முன்னர் பேசப்பட்டதாகவும், அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தனக்கு தெரியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். dc
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -