இலங்­கைக்குள் புதிய சிகரட் நிறு­வனம்

லங்­கைக்குள் மற்­று­மொரு சிகரட் நிறு­வ­னத்தை பதிவு செய்ய தயா­ராகி வரு­வ­தாக வெளியான தகவல் குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. சிகரட் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த ஜனா­தி­ப­தியால் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தமது சங்கம் நிபந்­த­னை­க­ளற்ற ஆத­ர­வ­ளித்­துள்­ள­தாக, அச்­சங்­கத்தின் செய­லாளர் நலிந்த சொய்சா தெரி­வித்தார்.

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலை­மை­யகத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கைக்குள் புதிய சிகரட் நிறு­வனம் ஒன்று பதிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக செய்­திகள் வெளியா­கி­யுள்­ளன.

இது குறித்து ஆராய்ந்து, இதன் பின்னணியில் இருக்கும் வர்த்­த­கர்கள் தொடர்பில் நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்க எமது சங்கம் முடிவு செய்­துள்ளது.

நாட்டில் சிகரட் உற்­பத்­தினை குறைப்­ப­தற்­காக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­ன­வுக்கு பக்­க­ப­ல­மாக செயற்­பட்­டுள்­ளது. அதனால் பக்க பல­மாக செயற்­பட்டோம். எனவே தற்­போது சிகரட் உற்­பத்­தியை தடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருக்க முடியும்.

இவ்­வாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டில் சிகரட் உற்­பத்­தியை குறைக்க பல தரப்­பு­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு வரு­கின்ற போது மறு­பு­றத்தில் சட்டவிரோ­த­மா­ன முறையில் சிகரட் நிறு­வனம் ஒன்று நாட்­டினுள் நிறு­வப்­பட்டு வரு­கின்­றது.

இந்த செயற்­பா­டு­களின் பின்னால் உள்ள வர்­த்­தகர்கள் யாவர் என்­பதை நாட்­டிற்கு வெளிப்­ப­டுத்த வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் கோரிக்கை விடுக்கும் அதேவேளை நாட்டில் சிகரட் உற்பத்தியை மட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முழு மூச்சுடன் செயற்படும் என்றார்.(வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -