இறக்காமம் சம்பவம் : அறிக்கை வெளியானது : பக்டீரியாவே காரணம்

ம்பாறை – இறக்காமம் பகுதியில் வழங்கப்பட்ட உணவு விசமடைந்தமைக்கு ஒருவகை பக்டீரியாவே காரணமென உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை இந்த விடயத்தை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் குறிப்பிட்டார்.

மக்கள் உட்கொண்ட இறைச்சியே இந்த பக்டீரியா தொற்றுக்குக் காரணம் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கூறினார். இறக்காமம் – வாங்காமம் பகுதியில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் போது சுமார் 1000 பேர் வரை கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் உட்கொண்ட உணவு விசமடைந்ததன் காரணமாக 800 பேர் வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, உணவு சமைத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, உணவு மாதிரிகள் கிடைக்காமை காரணமாக நோயாளர்களின் குருதி, சிறுநீர், மலம் என்பன இரசாயனப் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அவர்கள் உட்கொண்ட உணவில் பக்டீரியாத் தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -