”அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதி சடலமாக மீட்பு”

மெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியான ஷீலா அப்துஸ் சலாமின் சடலத்தை அமெரிக்காவின் ஹட்சன் ஆற்றிலிருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். நியூயோர்க்கின், ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஷீலா அப்துஸ் சலாம், கடந்த வாரத்தில் காணாமல் போனார். இந்நிலையில், புதன்கிழமை மதியம் 1.45 மணியளவில் அவரது உடல் ஹட்சன் ஆற்றில் கரை ஒதுங்கியது. 

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார், சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 65 வயதாகும் சலாம், அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மற்றும் கருப்பின நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 

மேலும் இவர் அமெரிக்காவின் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து நியூயோர்க் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -