கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் - முறைப்பாடு பதிவு

கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸாரினால் 09.04.2017 அன்று தாக்கப்பட்ட பெரியாற்றுமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.கைசர் தனக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டுமென்று இன்று (12) திருகோணமலை பிராந்திய காரியாலயமான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த போக்குவரத்துப் பொலிஸாரினால் தான் தாக்கப்பட்டு கிண்ணியா தளவைத்தியசாலையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடையாமல் வீடு திருப்பப்பட்டேன்.கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பாக முறைப்பாடு கூட பதிவு செய்தேன் எனக்கான தீர்வுகள் இது வரைக்கும் கிடைக்கவில்லை எனவே குறித்த போக்குவரத்துப் பொலிஸாருக்கு எதிராக இது வரைக்கும் எவ்வித சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவே எனக்கான தீர்வினைநபெற்றுத்தருமாறு திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலய இணைப்பாளரிடம் கோரிக்கை அடங்கிய கடிதத்தை எழுத்து மூலமாக சமர்ப்பித்தார்.

கைசரின் ஆதங்கம் செய்திக்கு...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -