போதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை..!



க.கிஷாந்தன்-
ட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் அதிகரித்து வரும் வாகன விபத்தை கட்டுப்படுத்த அட்டன் விசேட பொலிஸார் வாகனங்களை சோதனை செய்து அறிவுறுத்தி வருகின்றனர். அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் குடாகம பகுதியில் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தற்போது நுவரெலியாவில் வசந்தகாலம் என்பதால் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தி அனுப்புகின்றனர். மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் , வாகன அனுமதி பத்திரம் மற்றும் சாரதி மது அருந்தியுள்ளாரா என பரிசோதனை செய்த பொலிஸார் 16.04.2017 அன்று முதல் முழுமையாக வாகனங்களையும் அதனுடைய தரங்களையும் பற்றிய சோதனையை மேற்கொள்ளுகின்றனர்.

குறிப்பாக, hand brake, steering, gear, brake ஆகியவற்றை பரிசேதனை செய்கின்றனர். அத்தோடு வாகனங்களின் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -