"கொழம்ப குனு அபிட எபா" என மக்கள் கோஷம் - சம்பிக்க

மீதொடமுல்ல குப்பை கொழும்பு வாழ் மக்களுடையது மட்டுமல்ல. மாறாக அது முழு நாட்டு மக்களுடையது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மீதொடமுல்ல குப்பை சமுகாமைத்துவம் தொடர்பில் இற்றைக்கு 2 தசாப்தங்களுக்கு முன்னர் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பல இடங்களிலுமுள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனாலேயே இந்த திட்டம் கைவிடப்பட்டது.

“கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்” (கொழம்ப குனு அபிட எபா) என மக்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். உண்மையில் இங்கு சேருகின்ற குப்பை கொழும்பு மக்களுக்கு மட்டும் உரியதல்ல.

கொழும்பு நகரில் வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஆறரை லட்சம் பேர். ஒவ்வொரு நாளும் வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கு வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம். இவ்வாறு வரும் பத்து லட்சம் பேரும் பயன்படுத்தும் குப்பைகளும் இதில் அடங்குகின்றன.

எனவே, யாரும் இதனை கொழும்பு மக்களின் குப்பையாக கருத முடியாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -