திருகோணமலை: விபத்தில் பெண் மரணம் - சாரதி கைது

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-நிலாவௌி பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் இன்று (10) பிற்பகல் 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை.முருகாபுரி இலக்கம் 02இல் வசித்து வரும் கே.பிரியதர்ஷனி (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து நிலாவௌி சென்ற வேன் அதே பக்கத்தினூடாக சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்ட போது அலஸ்தோட்டம் கடற்கரைப்பகுதியிலிருந்து திருமலை நகருக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்த பெண்ணுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாக உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -