முபீனின் முயற்சியில் ஆரையம்பதி செல்வா நகரில் அழகிய நவீன முறையிலமைந்த சிறுவர் பூங்கா



ஆதிப் அஹமட்-

கர திட்ட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் முயற்சியில் நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீமின் முப்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மண்முனைப்பற்று ஆரையம்பதி செல்வா நகரில் அழகிய முறையிலான சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு வேலைகள் நிறைவடைந்திருக்கின்றது.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் முபீன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் கிருஷ்ணபிள்ளை மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய குழுவினர் அண்மையில் இவ்விடத்திற்கு விஜயம் செய்து இவ்வேலைத்திட்டத்தினை பார்வையிட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த முபீன்,இவ்வேலை த்திட்டமானது நவீன முறையில் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு உலகிலே சிறுவர் பூங்கா அபிவிருத்தியில் தலை சிறந்த நிறுவனமான அரிக்கன் டொட் கொம் என்ற நிறுவனத்திற்கு இவ்வேலைத்திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டு வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டிருப்பதாகவும் வெகு விரைவில் நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீமினால் இப்பூங்கா திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.​
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -