மீராவோடையில் மர்சூக்கு சொந்தமான தையல் கடை தீக்கிரை

ஹைதர் அலி-

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் கயாத்து முகம்மது முஹம்மது மர்சூக் என்பவருக்கு சொந்தமான தையல் கடை 2017.04.17ஆந்திகதி-திங்கட்கிழமை (இன்று) காலை தீக்கிரையாகியுள்ளது. இவர் மிக நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் தையல் கடை செய்து வருகிறார். 

இத் தீ விபத்தினால் சுமார் 250,000 (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபா பெறுமதியான உடு துணி பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கடை உரிமையாளர் மீராவேடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளரும், மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினருமாவார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -