தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதாமாளிகையில்..!

புத்தாண்டு பாரம்பரியங்களுக்கேற்ப தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கண்டி ஸ்ரீ தலதாமாளிகையின் ஸ்ரீ நாத தேவாலய வளாகத்தில் இன்று (15) முற்பகல் இடம்பெற்றது.

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வில் இன்று முற்பகல் 11.04 மணி என்ற சுபநேரத்தில் சியாமோபாளி மஹாநிக்காயவின் அஸ்கிரிபீட மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தேரரினால் ஜனாதிபதி அவர்களுக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்துவிடப்பட்டது.

சியாமோபாளி மஹாநிக்காயவின் மல்வத்தைபீட அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி அநுநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், சுகாதார போசனை சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன. பிரதி சபாநாயகர் திலகங்க சுமதிபால, மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தியவதன நிலமே நிலங்க தேல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -