இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொலிசார் நிவாரணம் சேகரிப்பு

பாறுக் ஷிஹான்-

யற்கை அனர்த்தத்தினால் தற்போது நாடு பூராகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தந்துதவுமாறு கோரி யாழ் நகரப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொலிஸார் நிவாரண பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய இந் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி இடம்பெறுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் எதிர்வரும் யூன் 1ஆம் நாள்வரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலோ யாழ் மாவட்ட பிரதிக் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திலோ பொருட்களை வழங்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -