ஞானசாரரைக் கைது செய்யக் கோரி பொலிஸ் மா அதிபருடன் அவசர சந்திப்பு..!

எஸ்.ஹமீத்-
மைச்சர்களான ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் பொலிஸ் மா அதிபருடன் ஓர் அவசர சந்திப்பைச் சற்று முன்னம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை உடனடியாக நிலை நாட்டுமாறு கோரியும் ஞானசாரரைக் கைது செய்யும்படி வேண்டியும் பொலிஸ் மா அதிபரை இவர்கள் வலியுறுத்தி எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைத்ததோடு, பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் புகார் ஒன்றினையும் இவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும், பொலன்னறுவை மற்றும் தோப்பூர் அசம்பாவிதங்கள், கோகிலவத்தைப் பள்ளிவாசல் தாக்குதல், மாயக்கள்ளி மலை விவகாரம், லாஸ்ட் சான்ஸ் தீ விவகாரம் ஆகியன பற்றியும் போலீஸ் மா அதிபருடனான சந்திப்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -