திருகோணமலை: கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் வைத்திருந்தவருக்கு தண்டம்

அப்துல்சலாம் யாசீம்-
கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்த இளைஞனுக்கு 1500/=ரூபாய் தண்டம் செலுத்துமாறு இன்று (03) திருகோணமலை மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.

மஹதிவுல்வெவ-புபுதுபுர பகுதியைச்சேர்ந்த பல்லேகெதர சமன்குமார (30வயது) என்ற இளைஞனுக்கே தண்டம் விதிக்கப்பட்டது.

தான் பாவித்து வந்த கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்துக்கொண்டு சக நண்பர்களுக்கு காண்பித்து வருவதாக மொறவெவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இளைஞனின் பேசியை சோதனையிட்ட போது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -