03 MPக்கள் இராஜினாமா..??

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கூட்டு எதிர்க்கட்சியின் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே கூட்டு எதிர்க்கட்சியின் வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொலோன்னேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இவர்கள் மூவரும் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என அரசியல் தரப்புத் தகல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -