அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மற்றுமொரு அபிவிருத்தி 16ஆம் திகதி ஆரம்பம்

சப்னி அஹமட்-
ட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மற்றுமொரு அபிவிருத்தி எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பித்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகமாக மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேச்த்தின்வைத்தியசாலையை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கியுள்ளது என கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் தலைமையிலான குழு இன்று (10) அட்டாளைச்சேன பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டது.

குறித்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வரும் மூன்று மாடி கொண்ட நோயாளர்விடுதித்தொகுதியினை வேலைப்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும், எதிர்வரும் 16ஆம் திகதிகுறித்த வைத்தியசாலையில் மற்றுமொரு வைத்திய நோயாளர் பிரிவு ஒன்றை அமைப்பதற்காகஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நடலை மேற்கொள்து தொடர்பாகவும்ஆராய்ப்பட்டது.

இதன்போது, தற்போது உள்ள நோயாளர் விடுதில் உள்ள குறைபாடுகள் அறிந்து அதனை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் வைத்தியசாலையில் உள்ளஅவசரசிக்கிச்சைப்பிரிவினை பார்வையிட்டனர்.

இதன் போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியல் அலாவுத்தீன், கணக்காளர், திட்டமிடம் பிரிவு, தொழிநுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள்தொடர்பாடல் அதிகார், வைத்தியசாலையின் வைத்தியர், ஊழியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்கலந்துகொண்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -