உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகி 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!

க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை சந்தியில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்ததில் அதில் பயணஞ் செய்த 20 பேர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை லெமிலியர் தோட்டத்திலிருந்து மட்டுக்கலை டி.ஆர்.ஐ தோட்ட தேயிலை மலைக்கு வேலைக்காக ஏற்றிச் சென்ற தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாளகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -