மேலும் ஹத்லூல், அவரின் குடும்பம் மற்றும் அவரின் வழக்கறிஞரை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை எனவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிருந்து செளதி அரேபியாவிற்கு வாகனம் ஓட்டி வர முயன்ற போதும் ஹத்லூல் கைது செய்யப்பட்டார்.
உலகிலேயே பெண்கள் வாகனம் ஓட்டுவதைத் தடை செய்துள்ள ஒரே நாடு சவூதி அரேபியாதான்.
ஹத்லூலின் சமீபத்திய கைதிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
மேலும் அவர் அரச வழக்கறிஞர்களால் விசாரிக்கப்படுவதற்காக ரியாதிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
ஹத்லூலை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், மேலும் "அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பது முட்டாள்தனமானது என்றும் அது நியாயமற்றது" என்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷ்னலைச் சேர்ந்த சமா ஹடிட் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆர்வலராக, செளதி அரசால் தொடர்ந்து மறுக்கப்படும் பெண்களின் உரிமை குறித்து அமைதியான முறையில் பணிபுரிவதால் அவர் இவ்வாறு இலக்கு வைக்கப்படுகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவது சட்டரீதியாக தவறில்லை என்ற போதிலும் ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது; மேலும் பெண் ஓட்டுநர்களுக்கு போலிஸாரால் அபராதம் விதிக்கப்படுகிறது.
நவம்பர் 2015 ஆம் ஆண்டில் ஹத்லூல், செளதி அரேபியாவின் தேர்தலில் பங்கு கொண்டார்; அந்த ஆண்டில் தான் அங்கு பெண்கள் வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் ஹத்துல்லாவின் பெயர் வாக்குச் சீட்டில் சேர்க்கப்படவில்லை.BBC