காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து







28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்-(படங்கள் இணைப்பு)-

28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) அனுசரணையில் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இன்று (24.06.2017) காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினரால் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

16 அணிகள் பங்குகொள்ளும், 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மேற்படி மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது இன்று காரைதீவு கனகரெட்ணம் மைதானத்தில் மங்கள விளக்கேற்றலுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், விவேகானந்தா விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இப் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 15.07.2017அன்று இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -