நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இனவாதச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இன்னமும் இனவாதமானது அப்படியே தான் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இதனை தடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அரசியலமைப்பு மாற்றத்தின் இது போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.