பங்களாதேஷைப் பாராட்டும் சங்கக்கார!


''ஐ.சி.சி. சாம்பியன்ஸ் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்திற்காக வங்கதேச அணி பெருமை கொள்ளலாம்!'' என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த போட்டியில் பங்களாதேஷ் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடியது. அவுஸ்திரேலியா உடனான தொடருக்காக அந்த அணி நம்பிக்கையுடன் டாக்கா திரும்புகிறது. அதேபோல், 2019ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் தந்திரமான திட்டமிடலுடன் தீவிர போட்டியாளர்களாக அந்த அணி இருக்க வேண்டும்.

தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தால் இரண்டு பெரிய ஐ.சி.சி தொடர்களில் நோக் -அவுட் சுற்றுவரை வங்கதேசம் அணி சென்றுள்ளது. பயிற்சியாளர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் சங்கத்தின் முழு ஒத்துழைப்பு மற்றும் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் தலைமையிலான மூத்த வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -