நாபீர் பௌண்டேசனின் இவ்வாண்டின் இறுதி இப்தார் நிகழ்வும் ஹிஜ்ரா பள்ளிவாசலின் குறைகளை கண்டறிதலும்

எம்.வை.அமீர்-

சாய்ந்தமருது வோலிவோரியன் சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தில் உள்ள ஹிஜ்ரா பள்ளிவாசலில் காணப்படும் குறைகள் தொடர்பாக நாபீர் பௌண்டேசனின் தலைவர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் நிகழ்வும் ஜமாத்தினருடனான இப்தார் நிகழ்வும் 2017-06-25 ஆம் திகதி பள்ளிவாசலின் ஸ்தாபக தலைவர் சட்டம் ஒழுங்குகள் அமைச்சின் மேலதிக செயலாளர், ஏ.எல்.எம்.சலீமுடைய வழிநடத்தலின் கீழ் செயலாளர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின்போது .பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களுக்கு அவசர தேவையாக உள்ள சுற்றுமதில் தொடர்பாக சுற்றிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுகளின்போது பள்ளிவாசலின் உபசெயலாளர் றிஷாட் மஜீட் உட்பட பள்ளி நிருவாகத்தினர் மற்றும் முஹல்லாவாசிகளும் நாபீர் பௌண்டேசனின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -