எம்.வை.அமீர்-
அல் சுபைதா ஸ்ரீலங்கா அமைப்பின், மாற்றுத்திறனாளிகளுடனான இப்தார் நிகழ்வு, சாய்ந்தமருது வொலிவோரியன் ஹிஜ்ரா பள்ளிவாசலில் 2017-06-24 ஆம் திகதி அவ் அமைப்பின் தலைவர் ஐ.எம்.கதாபி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அல் சுபைதா ஸ்ரீலங்கா அமைப்பின் ஸ்தாபகரும் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளரும் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் மற்றும் தொழிலதிபர் பஸ்மிர் முஹர்றம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அவ்அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பினால் அழைக்கப்பட்டவர்கள் மற்றும்மாற்றுத்திறனாளிகள் இணைந்து இப்தாரில் ஈடுபட்டனர்.