வன்முறைகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை என்கின்றார் பிரதமர்

ஏனைய மதங்களையும் கலாச்சாரங்களையும் வெறுக்கும் ஒருவர் இலங்கையராக இருக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் விஷேட அறிவிப்பொன்றை நிகழ்த்தி பிரதமர் இதனை குறிப்பிட்டார்.“நான் இலங்கையனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன், நான் ஏனைய மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்கிறேன்” என பிரதமர் இதன்போது ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, இனங்களுக்கெதிராக வன்முறைகளை தூண்டிவிடுபவர்களுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமைச்சரவை அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவைப்படின் புதிய சட்டங்களையும் உருவாக்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -