அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கப்பாடு

திகாரப் பரவலாக்கல் தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதில் மத்திய அரசு மற்றும் மாகாணசபைகளுக்கு இடையிலேயே முரண்பாடுகள் எழுந்துள்ளன.

தீர்வுகள் தொடர்பில் ஆழமாக கலந்தாலோசிக்கவேண்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசியல் அமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை தொடர்பில் பிரதான கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பிலான மாநாடு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -