கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் புனித மக்காவிலிருந்து விடுத்துள்ள நோன்புப் பெருநாள்வாழ்த்துச் செய்தி

எஸ்.அஷ்ரப்கான்-

ர்வதேசத்தின் தேவைகளும், தலையீடுகளும் அதிகரித்துக் காணப்படும் இக்காலகட்டத்தில் வெளிநாட்டு சக்திகளின் பின்னனியிலுள்ள, சில இனவாதக் குழுக்கள் எமது நாட்டில் ஒற்றுமையாக வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு அமைதியற்ற சூழலை உருவாக்கமுயற்சிப்பதாகவும், இந்தவிடயத்தில் முஸ்லிம்களாகிய நாம் அவதானத்துடனும், பொறுமையுடனும் செயற்படவேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புனித ரமழான் மாதத்தில் இறையச்சத்துடன் நோன்பு நோற்று ஆன்மீக மேம்பாட்டிக்காக வணக்க வழிபாடுகளிலும்ஈடுபட்டு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும்நோன்புப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்

இதேவேளை போரினாலும், அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் அகதிவாழ்வு நடத்துகின்ற நமது மக்களுக்கு நிம்மதியான வாழ்வு மலர்வதற்கும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும்எமது முஸ்லிம் சமூகம் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இப்பெருநாள் தினத்தைக் கொண்டாடி மகிழ இப்புனிதத்திருநாளில் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மலர்ந்திருக்கும் இந்த ஈகைத் திருநாளில் பல்லின சமூகத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சகோதரசமூகத்திற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் எம்முடைய கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் நாம் முன்மாதிரியான சமூகம் என்பதை நிரூபித்து, எமது அமைதியான பெருநாள் கொண்டாட்டத்தில்ஏனைய சகோதர இன மக்களையும் இனைத்து சகோதர வாஞ்சையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக எமது நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகம் அனைத்துஉரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு அனைவரும் கைகோர்த்துஅர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய அழகிய வழிமுறையில் இப்பொருநாள்தினத்தை நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோமாக என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -