நேற்று கூட்டு எதிர்கட்சி அமைப்பு நடத்திய ஊடக மாநாட்டில் முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே ஞானசாரதேரரை கைது செய்யமுடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் என கூறியிருந்த நிலையில் இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டிவி சானகவிடம் கேள்வி
எழுப்பப்பட்ட போது அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.
சட்டம் அனைவருக்கும் சமமானதாகும்.
யுத்ததை முடித்த புலனாய்வு பிரிவு இருக்கும் இந்த நாட்டில் நான்கு பொலிஸ்குழுக்கள் அமைத்து
ஒருவரை பிடிக்க முடியாது என்பது வேடிக்கையான விடயம். இதே கதையை தொடர்ந்துபொலிஸார் கூறிவந்தால் பொலிஸாரை காமடி பொலிஸ் என்று மக்கள் அழைப்பார்கள்.
இந்த திருடன் பொலிஸ் விளையாட்டில் அரச உயர்மட்ட தலையீடு இருக்கலாம்.
இல்லாமல் இவ்வாறு நடக்கவாய்ப்பில்லை.
ஞானசார தேரர் விவகாரம் இந்த அளவு பேசுபொருளாக மாறியும் அவரை அரசு கைது செய்யவில்லை என்றால் அவர் இந்த அரசாங்கத்தில் எந்த அளவு பலம் பொருந்திய சக்தியாக இருக்க வேண்டும்
என டிவி சானக குறிப்பிட்டுள்ளார்.