ஞானசாரர் பிணை மனுவை மீளப் பெற்றார்..!

தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீளப் பெற்றுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) உயர்நீதின்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஞானசாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஞானசார தேரர் நேற்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்தே குறித்த மனு மீளப்பெறப்பட்டுள்ளது.

சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுக்காக ஞானசார தேரர் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ஆ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -