சவளக்கடை, மத்தியமுகாம் ஜம்மிய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ள புனித நோன்புப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் 5ஆம் கொளனி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நோன்புப் பெருநாள் தினத்தன்று காலை 6.30 மணிக்கு ஆண்,பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக நடாத்தப்படும்.
நோன்புப் பெருநாள் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் சவளக்கடை, மத்தியமுகாம் ஜம்மிய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.சி.தஸ்தீக் (மதனி) நடாத்தவுள்ளார்.
இவ் நபி வழியான பெருநாள் தொழுகையில் சவளக்கடை, மத்தியமுகாம் பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும் உரிய நேரத்திற்கு கலந்துகொள்ளுமாறும். வரும்போது வீடுகளிலேயே வுழு செய்து கொண்டு வருமாறும், முடியுமானவர்கள் முஸல்லா கொண்டுவருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.