நுகேகொட, மஹரகம தீக்கிரை சம்பவத்திற்கு காரணம் பொதுபல சேனா உறுப்பினரே - பொலிஸ்மா அதிபர்

நுகேகொட, மஹரகம பகுதிகளில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்கிய நபர் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ்மா அதிபர் இதை தெரிவித்துள்ளார்.கடந்த சில வாரங்களாக மஹரகம தொடக்கம் நுகேகொடை வரையான பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் நான்கு தீக்கிரையாகி அழிந்து போயிருந்தன.

இது தொடர்பில் அண்மையில் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்ததுடன், குறித்த நபரும் அதை ஒப்புக்கொண்டிருந்தார்.

எனினும் தற்போது குறித்த நபர் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -