அம்பாரை மாவட்டத்தில் அதிரடி அரசியல் மாற்றம் ஏற்படும்- பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி




ஏ.எல்.எம்.ஷினாஸ்-

ம்பாரை மாவட்டத்தில் அதிரடி அரசியல் மாற்றம் ஏற்படும்-கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மருதமுனையில் தெரிவித்தாா்

மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் 40 வது வருட இப்தார் நிகழ்வு கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் வை.கே.றஹ்மான் தலைமையில் மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் (14.06.2017) இடம்பெற்றது.
இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இவ்வாறு தெரிவித்தாா். தொடா்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்,

முஸ்லிம்களுக்கு எதிராக நடை பெறுகின்ற அனியாயங்களை தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலமை என்னைப் பொறுத்தளவில் இன்று இந்த நாட்டில் இல்லை என்று நினைக்கின்றேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் முஸ்லிம்கள், தமிழா்களுக்கு ஏதோ ஒரு துரத்தில் நின்றுகொண்டு அனியாயம் செய்த இரண்டு கட்சிகளையும் ஒன்று சோ்த்து விட்டு இப்போது சங்கடப்படுகின்ற, வேதனைப்படுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் எமது எல்லோரினதும் பிராத்தனையாகும். இதற்கு இங்கிருக்கின்ற கல்வியலாளா்கள் எமக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.


முஸ்லிம்கள் குர்ஆன்-ஹதீசை பேசுகின்றவா்கள் நம்மிடம் இருக்கும் சமாதானம்,சக்காத், மனித உரிமைகள், ஹறாம்-ஹலால், நன்மை-தீமை, ஒற்றுமை பற்றிய பக்குவம் வேறு எவரிடமும் கிடையாது. ஆனால் கடந்த காலங்களில் செயல் வடிவில் அவா்களிடத்தில் கொண்டு செல்லப்படவில்லை, பேசப்படவில்லை. எதிர்காலத்தில் நாம் விட்டுக் கொடுப்பின் மூலம் அவா்களோடு நெருங்கிப்பழகுகின்ற விடயம் அவசர அவசரமாக செயட்யப்பட வேண்டும்.

இது அரசியல் வாதிகளோடு மட்டும் சம்பந்தப்பட்ட விடயமல்ல. எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினா்களும் ஹலாலாக பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். கல்வியலாளா்களாகிய நீங்கள் மக்களை வழிகாட்ட வேண்டும்.

அமைச்சரவையை மாத்திரம் ஒரு சில முஸ்லிம் அமைச்சர்கள் பகிஷ்கரிப்பு செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பகிஷ்கரிப்பு செய்வது என்றால் பாராளுமன்றத்தை ஒட்டுமொத்தமாக பகிஷ்கரிப்பு செய்ய வேன்டும். இந்த சமூகத்தின் பேச்சாகவும், மூச்சாகவும் நாங்கள் இருக்க வேண்டும்.
அம்பாரை மாவட்டத்தில் இன்று மாற்றத்துக்கான புரட்சியை ஒவ்வொரு ஊர் ரீதியாக செய்துவருகிறோம். விரைவில் அம்பாரை மாவட்டத்தில் அதிரடி அரசியல் மாற்ம் ஏற்படும் என்றாா்.

இப்தார் விஷேட மார்க்கச் சொற்பொழிவை கழகத்தின் கலாச்சாரப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஐ .ஹுஸைனுத்தின் (றியாழி) நிகழ்த்தினாா். கழகத்தின் ஸ்தாபகர் எம்.ஏ.ஜமால் முஹம்மட், கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.பி.எம்.றஷீட், பொதுச் செயலாளர் ஏ.எம்.றியாஸ் உட்பட கழகத்தின் உயர்பீட உறுப்பினர்கள், வீரர்கள் ஊரின் கல்வியலாளா்கள் பலரும் இதில் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -