வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் !




முகம்மத் அஜ்வாத்-
ல்முனைக்கான வளைகுடா அமையத்தினது (Gulf_federation_for_kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை (17-06-2017) பிற்பகல் 05:30 மணிக்கு அபு ஹமூரில் அமைந்துள்ள லக்பிம க்ராண்ட் (Lakbima Grand Restaurant) இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கத்தாரில் தொழில்புரியும் கல்முனை பிரதேசத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 200 சகோதரர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கத்தாரில் குடும்ப சகிதம் வசிக்கும் பலர் குடும்ப சகிதம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களினால் மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்பட்ட இந்நிகழ்வானது கடல் கடந்து கத்தாரில் நாலாபுரங்களிலும் பறந்துவாழும் முனையூர் உள்ளங்களை ஒன்று சேர்த்த உறவுப்பாலமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களினால் இவ்வரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திதந்த Gulf Federation for Kalmunai (GFK) அமையத்தினை வாழ்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -