சவூதி அரேபியாவில் பாரிய தீ விபத்து - 11 பேர் பலி

வூதி அரேபியாவின் தென் மேற்குப் பிராந்தியமான நஜ்ரானின் பைசாலியா மாவட்டத்தில் தங்க நகைச் சந்தைக்கருகில் கட்டுமான வேலையாட்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 10 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பங்களாதேஷ் நாட்டவர். இந்தக் கொடூர விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பந்தமான விசாரணைக்கு நஜ்ரான் கவர்னர் இளவரசர் ஜுலுவி இபின் அப்துல் அஸீஸ் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட வீடு காற்றோட்டமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -